×

ஓஓ… இதுதான் அழகுல மயங்குறதா… குமுதா ஹேப்பி அண்ணாச்சி!

ஒரு காலத்தில் திருமணம் என்றால் பெற்றோர்கள் மற்றும் பெரியவர் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டு, திருமணம் முடிந்தபின்புதான் மணமகன் மற்றும் மணமகளை வெளியே அனுப்புவார்கள். ஆனால், இன்றைய தலைமுறை திருமணம் வேறு. காதல் திருமணம் என்றாலும், பெற்றோர்களால் பார்த்து வைக்கப்படும் திருமணங்கள் என்றாலும் தாலி கட்டும் முன்பு இருவரும் ஒன்றாக வெளியே சென்று ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை என்ற படிக்கட்டில் அடி எடுத்து வைக்கின்றனர்.

முன்பெல்லாம் பெண் பார்க்க வரும்போதும், திருமணத்தின்போது மாப்பிள்ளை எப்போது வருவார் என்று ரகசியமாக மணமகள் ஒளிந்து பார்க்கும் சுவாரஸ்யம் அரங்கேறும். இது, இந்த காலத்திலும் நடக்கிறது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமகன் மேடைக்கு வந்தவுடன் அவரை பார்க்க மணமகள் ஓடுகிறார். அப்போது உடன் இருந்தவர்கள், ‘உடனே மாப்பிள்ளையை பார்த்திரணும்’ என்று கிண்டலடிக்கின்றனர். இருந்தும், ஒளிந்து கொண்டு ரகசியமாக மணமகனை பார்க்கும் மணமகள் உற்சாக மிகுதியில் உணர்ச்சிவசப்பட்டு சிரித்து கொண்டே தனது அறைக்கு வருகிறார். தனது அறைக்குள் வந்ததும், ‘ஓ…காட்… எவ்வளவு அழகா இருக்கானு தெரியுமா?. நாளைக்குதான் என் கல்யாணம்’ என்று வெட்கத்துடன் கைத்தட்டி அவர் சிரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ஓஓ… இதுதான் அழகுல மயங்குறதா… குமுதா ஹேப்பி அண்ணாச்சி! appeared first on Dinakaran.

Tags : Kumuda ,Annachi ,
× RELATED பிரபு, வெற்றி இணையும் ஆண்மகன்